என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திடீரென அறுந்து விழுந்த மின் கம்பி
- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
- மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பகுதியில், பொது மக்களின் தேவைக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை லேசான காற்று அடித்தது. அப்போது புதூர் பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செல்லும், உயர் மின் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார், விரைந்து சென்று மின் கம்பி அறுந்து விழுந்த இடத்தில், யாரும் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்