என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆந்திர வாலிபர்கள் 2 பேர் கைது
- வாணியம்பாடி கோவில்களில் உண்டியல் உடைத்து கைவரிசை
- சி.சி.டி.வி. கேமரா மூலம் சிக்கினர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த தெக் குப்பட்டு கிராமத்தில் ஏரிக்கரையோரம் பெருமாள் கோவில் மற்றும் ஓம்சக்தி கோவில் ஆகிய 2 கோவில்களள் அமைந்துள்ளது.
இந்தக் கோவில்களில் தினமும் பூஜை செய்து வழக்கம். பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை 'உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். கோவிலில் திருடிவிட்டு தப்பி சென்ற ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ராஜவேலு (வயது 28), சேகர் (27) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் அம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.






