search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்திய 18 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    ரெயிலில் கடத்திய 18 கிலோ கஞ்சா பறிமுதல்

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு அருண்குமார் மற்றும் ரெயில்வே போலீசார் இன்று அதிகாலை ஒரிசா மாநிலம் ஆட்டியா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில மாண்டியா வரை செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள பொது ஜனரல் பெட்டியில் சந்தேகத்தின் பேரில் அமர்ந்து பயணம் செய்த வாலிபரின் 2 பேக்கை சோதனை செய்தனர். அதில் 2 பண்டல்களில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநில பெங்களூர் மாண்டியா பகுதியைச் சேர்ந்த சுமந்த் (வயது 21)என தெரியவந்தது.

    அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×