search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம காய்ச்சலால் 10 மாத பெண் குழந்தை சாவு
    X

    மர்ம காய்ச்சலால் 10 மாத பெண் குழந்தை சாவு

    • மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பெரிய மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் பரமாத்மா (வயது31) இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி செந்தாமரை என்கிற மனைவியும், கனிஷ்கா (வயது 3), யோகஸ்ரீ (10 மாத குழந்தை) உள்ளனர்.

    இந்நிலையில் யோகஸ்ரீக்கு கடந்த மாதம் 15-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்தும் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யோகஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து தந்தை பரமாத்மா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×