search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவி
    X

    கலெக்டர் கிறிஸ்துராஜ் காசோலை வழங்கிய காட்சி.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவி

    • முதற்கட்டமாக 6 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
    • 464 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை கோருதல், சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 464 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 வட்டாரங்களிலுள்ள 122 ஊராட்சிகளில் நுண் தொழில் நிறுவன நிதி கடன் திட்டமானது செயல்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 6 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.15, 945 மதிப்பீட்டில் கைபேசி மற்றும் பிரெய்லி கைக்கடிகாரம் மற்றும் மடிப்பு குச்சி ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் , மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார், உதவி கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×