search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேக்கு மரத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து
    X

    விபத்துக்குள்ளான லாரியை ஜே.சி.பி உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை படத்தில் காணலாம்.

    தேக்கு மரத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

    • பெரியசாமி கொட்டாயைச் சேர்ந்த செந்தில் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
    • தேக்கு மரத்தின் மீது மோதியதில் மரம் வேரோடு சாய்ந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ரோட்டில் உள்ள பள்ளப்பட்டி பெரியசாமி கொட்டாய் செல்லும் சாலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பெரியசாமி கொட்டாயைச் சேர்ந்த செந்தில் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய லாரி சாலையின் ஓரத்தில் உள்ள தேக்கு மரத்தின் மீது மோதியதில் மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனையடுத்து பலத்த சேதம் அடைந்த லாரியை ஜே.சி.பி உதவியுடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் செந்தில் எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×