என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூர் காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்19 March 2023 10:01 AM GMT
- இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டு, வருஷாபிஷேக விழா வருகிற 27- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முன்னதாக நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 350 சுமங்கலி பெண்கள், தாங்கள் கொண்டு வந்த குத்து விளக்குகளுக்கு அலங்காரங்கள் செய்து தீபம் ஏற்றி கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை தொடங்கினர்.
வேத விற்பனர்கள் மந்திரங்களை உச்சரிக்க அதனைத்தொடர்ந்து சுமங்கலிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு குங்குமம், மஞ்சள், மலர்கள், அக்ஷதை ஆகியவற்றை கொண்டு திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்தனர்.
இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X