search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்காடு புதன் பகவான் கோவிலில் தெப்போற்சவம்
    X

    புதன் பகவான் கோயில் தெப்போற்சவம் நடை பெற்றது.

    திருவெண்காடு புதன் பகவான் கோவிலில் தெப்போற்சவம்

    • திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது.
    • விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறுகோயில்களில் முதன்மையான கோயிலாகும்.

    இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் விழுந்து முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

    சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோர முர்த்தியாக தனிசன்னதி கொண்டு விளங்குகிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார்.

    இந்த கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

    விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர்.

    இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 5 முறை வலம் வந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×