search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து தொழிலாளி சாவு
    X

    விஷம் குடித்து தொழிலாளி சாவு

    • வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார்
    • குடும்ப தகராறு காரணமாக விபரீதம்

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த வடமனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 27). ஆடுகளை மேய்த்து வந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முருகன் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வாயில் நுரை தள்ளியபடி கிடந்த கார்த்திகை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு வெம்பாக்கம் பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மோரணம் போலீசில் சுகந்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×