என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
ஆரணி:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 69). இவரது மனைவி நீலாவதி (49).
இவர்கள் குடியாத்தத்தில் இருந்து ஆரணி நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.
கொங்கராம்பட்டு கிராம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கணவன் மனைவி இருவரும் தவறி கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாவதி உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X