search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
    X

    பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

    • 4½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோழவரம் கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் பவித்ரா (27).

    இவருக்கும் செய்யாறு வட்டம் எரையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சகாதேவன் என்பவருக்கும் கடந்த 4½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவருடன் வாழ விருப்பம் இல்லாமல், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தந்தை முருகேசனுடன் சோழவரம் கிராமத்தில் வசித்து வந்தனர். பவித்ரா கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இறந்த பவித்திராவின் உடலை கைப்பற்றி செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமணம் ஆகி சுமார் நான்கு வருடங்களுக்குள் பவித்ரா இறந்ததால் செய்யாறு சப் கலெக்டர் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

    Next Story
    ×