search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி
    X

    பைக்கில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

    • பலத்த காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த தச்சம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் சுதாகரன், (வயது 47) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2மகன்கள், 1 மகள், உள்ளனர்.

    சுதாகரன், நேற்று இரவு சேத்துப்பட்டு, புறவழி சாலை வழியாக தச்சம்பாடி, நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புறவழி சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுதாகரன், பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர், சிஎம்சி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதாகரன், வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×