search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
    X

    பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

    • பிறந்த நாள் விழாவிற்கு சென்று திரும்பிய போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 20 ) பலசரக்கு கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் செய்யாறு பகுதியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவிற்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    மாமண்டூர் பகுதியில் வரும்போது வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த சங்கரை கிராம பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×