அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது

டிரைவரை ஆபாசமாக திட்டி தாக்கினார்போலீசார் விசாரணை
அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது
Published on

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தில் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த சின்னராஜ் என்பவர் வலதுபுறமாக உள்ள பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இதனை தட்டிக் கேட்ட பஸ்சின் டிரைவர் மாதவனை ஆபாசமாக திட்டி தாக்கினார்.

இது சம்பந்தமாக அரசு பஸ் டிரைவர் மாதவன் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து, சின்னராஜை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com