search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி நசுங்கி சாவு
    X

    மூதாட்டி நசுங்கி சாவு

    • பள்ளி பஸ்சில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 80).

    இவர் இன்று காலை செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே காசியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×