என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி
- ஒரே பைக்கில் 3 பேர் சென்றனர்
- பதிவு செய்து போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 16). இவர் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். செங்கம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் அரவிந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார், இறந்த வாலிபர் அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






