search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    போளூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    உடல் நலம் சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் வீட்டில் சந்தோஷ் நேற்று தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைக் கண்ட தாயார் சரஸ்வதி அவரை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×