என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்த காட்சி.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்
- சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம் வெகு விமர்சையக நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கும் ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story