search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி ஆலை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
    X

    தேங்கி கிடக்கும் கழிவு நீரை படத்தில் காணலாம்.

    அரிசி ஆலை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

    • நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.

    இந்த அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் சென்று அடைப்புகள் ஏற்பட்டு பின்னர் குடியிருப்பு பகுதியில் தேங்கி தேங்கி வருகிறது.

    குடியிருப்பு பகுதி காலிமனைகளில் அரிசி ஆலை கழிவு நீர் தேங்கியதால் கொசு உற்பத்தி பண்ணை போல் காட்சியளிக்கின்றன.

    மேலும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் குழந்தைகள் முதியவர்கள் காய்ச்சல் ஏற்படுவதும் நோய் தொற்றும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.

    இது சம்மந்தமாக அரிசி ஆலை உரிமையா ளர்களிடம் ஊராட்சி நிர்வாகி மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் பல முறை முறையிட்டும் அதிகாரிகள் செவி சாய்ப்ப தில்லை எனவும் குடியிருப்பு வாசிகள் குற்றசாட்டுகின்றனர்.

    மேலும் அரிசி ஆலை கழிவு நீர் தொடர்ந்து தேங்கி வருவதால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×