என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் தூக்கிட்டு தற்கொலை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28), தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (21).
திருமணம் ஆனதிலிருந்து கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மனமடைந்த சித்ரா வீட்டில் புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதனைப் பார்த்த ராஜா மற்றும் உறவினர்கள், சித்ராவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆரணி சப்- கலெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X