search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ மோதி விவசாயி பலி
    X

    ஆட்டோ மோதி விவசாயி பலி

    • சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    மேல்மலையனூர் ஒன்றியம் கம்மந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54), விவசாயி.

    இவர் சேத்துப்பட்டில் ஆரணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ செல்வராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றார்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×