search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மோதி முதியவர் சாவு
    X

    பஸ் மோதி முதியவர் சாவு

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (60), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் நேற்று தனது பைக்கில் கேளூர் சந்தைமேட்டிற்கு வந்தார்.

    சமத்துவபுரம் நுழைவாயில் அருகே சென்றபோது, திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சந்தவாசல் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×