என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கோவில் அருகே ரூ.6.40 கோடியில் புதிய கடைகள் கட்டிட பணி
    X

    அமைச்சர் எ.வ.வேலு புதிய கடைகள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய காட்சி.

    திருவண்ணாமலை கோவில் அருகே ரூ.6.40 கோடியில் புதிய கடைகள் கட்டிட பணி

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை `அருணாசலேசுவரர் கோவில் முன்பு புதிதாக கட்டப்பட உள்ள கடைகளுக்கான கட்டுமான பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை அடிக்கல் நாட்டினார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6 கோடியே 40 லட்சம் மதிப்பில் கடைகள் கட்டப்பட உள்ளது.

    புதிய கடைகள் கட்டுவதற்கான கட்டுமான பணியை இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் டிஎம் சண்முகம், ராஜசேகர், தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், கோவில் மணியம் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×