search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 16-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்
    X

    வருகிற 16-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கு தகுதியான நபர்களை வரும் 16-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 2.மணி வரை தேர்வு நடைபெற உள்ளன.

    இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ.. பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் போது 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    விருப்பமுள்ளவர்கள் www.tnprivatcjobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை எவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×