search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு மேலாண்மை தொட்டி உடைப்பு
    X

    உடைக்கப்பட்ட தொட்டி.

    திடக்கழிவு மேலாண்மை தொட்டி உடைப்பு

    • ஒப்பந்ததாரர் போலீசில் புகார்
    • கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    போளூர்:

    போளூர் அடுத்த அலங்கார மங்கலம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேர்த்து பொதுவாக ஒரு இடத்தில் கொட்டுவதற்காக 15 -வது நிதி குழுவின் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க ப்பட்டது.

    அலங்காரம் மங்கலம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் திடக்கழிவு அமைக்கப்பட்ட இடத்தில் கொட்டுவது வழக்கம்.

    அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குப்பைகளை இங்கே கொட்ட கூடாது, என்று தூய்மை பணியா ளர்களை தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    2 நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக வந்து கடப்பாரை, மண்வெட்டி யால் திடக்கழிவு மேலாண்மைக்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டியை அகற்றி உள்ளனர்.

    இன்று காலையில் சேகரிக்கப்பட்ட குப்பை களை கொட்டு வதற்காக தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது திடக்கழிவு தொட்டிகளை இடித்து தள்ளப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து ஒப்பந்த தாரர் முனுசாமி என்பவர் போளூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் பொதுமக்கள் திடக் கழிவு மேலாண்மையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Next Story
    ×