search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்த கோழிகளை கொட்டியதால் துர்நாற்றம்
    X

    இறந்த கோழிகளை கொட்டியதால் துர்நாற்றம்

    • நள்ளிரவு மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கடைசி குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மகேஷ் இவர் கிராமத்தில் 10 ஏக்கரில் நெல் கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் விவசாயம் செய்யும் விவசாய கிணற்றில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோழி கழிவுகளை கிணற்றில் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

    இதனால் அந்த விவசாய கிணறு துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டது.

    அங்கு வசிக்கும் 15 குடும்பங்களுக்கு இந்த விவசாய கிணற்றில் இருந்து தான் குடிநீர் எடுத்துச் செல்லுகிறது வழக்கம். இதனால் பே்பகுதி மக்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×