search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
    X

    முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு

    • முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
    • கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மனைவியிடம் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அதிகாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முகத்தில் வெட்டு காயங்களுடன் ரமேஷ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    கணவன்- மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியை எடுத்து ரமேஷ் தனக்கு தானே முகத்தில் வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

    ஆனாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியவரும். எனவே மர்ம சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் ரமேஷ் மனைவி மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×