search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் மீது மினி பஸ் மோதி விபத்து
    X

    மொபட் மீது மினி பஸ் மோதி விபத்து

    • 3 பேர் பலி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காரம் மதுரா ஆவணவாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நாவப்பன். இவரது மகன்கள் கன்னியப்பன் (வயது 50), குரு நாதன் (45). அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் ரவி (50).

    இவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் காமராஜர் நகரில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

    வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ் சாலையில் வங்காரம் கூட்டு ரோடு பகுதியில் போளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் திடீரென மொபட் மீது மோதியது.

    இதில் மொபட்டில் வந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னூர் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×