search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
    X

    தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

    • தூசி அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள குண்டியாந் தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் மற்றும் உத்திரமே ரூரை அடுத்த கருவேப்பம் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பின் னர் அவர்கள் போதையில் நாங்களும் ரவுடிதான் என பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.

    இதனை அந்த பகுதியில் இருந்த ஏகாம்பரம் மகன் சபேஸ் தட்டிக்கேட்டார். ஆத் திரம் அடைந்த கார்த்திக், அர விந்தன் ஆகியோர் ஆபாச மாக பேசி கையில் வைத்தி ருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து பொதுமக்கள் மீது வீசினார் கள்.

    இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்டு ஒதுங்கவே தீயில் இருந்து தப்பினர். உடனே கிராம மக்கள் 2 வாலி பர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து சபேஸ் நேற்று தூசி போலீசில் புகார் செய் தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து கிராமத்தில் ரவுடி தனம் செய்து பெட்ரோல் குண்டு வீசிய கார்த்திக், அர விந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×