search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து  24-ந் தேதி நடக்கும் மறியல் போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்
    X

    தஞ்சையில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

    மத்திய அரசை கண்டித்து 24-ந் தேதி நடக்கும் மறியல் போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்

    • தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழுவின் சார்பில் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழுவின் சார்பில் நடைபெறும்.

    மாநிலந்தழுவிய மறியல் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான சங்க தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்று வெற்றி பெறச்செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் சுகுமாறன், சேவையா, இராமையன், செல்வராஜ், இசக்கி அம்மாள் , பண்ணை சங்க பொதுச்செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×