search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி
    X

    கும்பகோணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடந்தது.

    புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி

    • தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி மறைமாவட்ட முதன்மை குரு இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் தேவதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.

    முன்னதாக ஆயர் அந்தோ ணிசாமி தலைமையில் காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார், எழுந்தருள ஆயர் அந்தோணிசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.

    தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறை வேற்றினர்.

    நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×