search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்குகள்ளிகுளம் ஐ.டி.ஐ-ல் பட்டமளிப்பு விழா
    X

    அய்யா வைகுண்டர் ஐ.டி.ஐ. பட்டமளிப்பு விழாவில் புரவலரும், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தர்மகர்த்தாவுமான மருத்துவர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சான்றிதழ் வழங்கிய காட்சி

    தெற்குகள்ளிகுளம் ஐ.டி.ஐ-ல் பட்டமளிப்பு விழா

    • நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது
    • ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நாடார் மஹாஜன சங்கத்தின் அய்யாவைகுண்டர் ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐ.டி.ஐ-ன் பட்டமளிப்பு விழா இணைச் செயலாளர் எம்.ரோச் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் படித்து முடித்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ -ன் புரவலரும், பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் தர்மகர்த்தா வுமான மருத்துவர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதிப்பெண் தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மதர் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் தெரன்ஸ் பரிசுகள் வழங்கி பாராட்டி னார்.

    விழாவில் கள்ளிகுளம் டி.எம்.பி.வங்கி மேலாளர் அய்யனார் இளையரசன், அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜாண்ததேயுஸ், முன்னாள் மாணவர் மனோஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஐ.டி.ஐ. முன்னாள் முதல்வர் டி.சி.ஸ்டீபன் வரவேற்றார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×