என் மலர்
உள்ளூர் செய்திகள்

லேப்டாப், செல்போன்கள் திருட்டு
- லேப்டாப், செல்போன்கள், அளவீடு செய்யும் கருவி என விலையுயர்ந்த பொருட் களை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றுள்ளனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே சித்தூர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 608 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியினை மேலாளரான சண்முக நாதன் என்பவர் இருந்து கவனித்து வருகிறார். அவர் தங்குவதற்கு ஒரு சீட்டு போட்ட அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்த லேப்டாப், செல்போன்கள், அளவீடு செய்யும் கருவி என விலையுயர்ந்த பொருட் களை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






