search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்
    X

    ரெயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

    ரெயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுர்ஜா என்ற பெண் அவரது கணவருடன் சன்ஜெய்யுடன் அசாம் செல்வதற்காக ஐந்தாவது நடைமேடைக்கு வந்துள்ளார்.

    ரயிலுக்காக காத்திருந்த நிலையில் ரயில் வந்தவுடன் முன்பதிவு பெட்டியில் ஏற முயன்றபோது சுர்ஜா தவறி ெரயில் பாதைக்கும் விழுந்தார். இதனை அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் ரயிலை நிறுத்தினர். இதையடுத்து ரயில் பாதையில் விழுந்து கிடந்த சுர்ஜாவை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    அப்போது முதுகு பகுதியில் சுர்ஜாவிற்கு படுகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×