என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.
பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- ராம்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.
- நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார்.இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில் காணாமல் போன நிர்மலா, ராம்குமார் உடன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






