search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகனுக்கு பரோல் வழங்கக் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு
    X

       முருகன்          நளினி

    முருகனுக்கு பரோல் வழங்கக் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு

    • முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார்

    ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரோலில் வெளியில் வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முருகனின் மருத்துவ சிகிச்சைக்காக 6 நாட்கள் அவசர விடுப்பாக கருதி பரோல் வழங்க வேண்டும் என நளினியும், அவரது தாயார் பத்மாவும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளித்திருந்தனர்.

    அந்த மனுக்களை பரிசீலனை செய்த சிறைத்துறை சூப்பிரண்டு அப்துல்ரகுமான், முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, அவர் விடுப்புக்கு தகுதி பெறவில்லை என்று கூறி நளினியின் மனுவை நிராகரித்துள்ளார்.

    Next Story
    ×