என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த பெண் சாவு
- பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
- சம்பவத்தன்று மன விரக்தியில் இருந்த உமா விஷம் குடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொ ட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ்.
இவரது மனைவி உமா (வயது 30). இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருட ங்கள் ஆனநிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உமா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சம்பவத்தன்று மன விரக்தியில் இருந்த உமா விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






