என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த ஊராட்சி செயலாளர் சாவு
- எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார்.
- சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைபட்டு அடுத்த சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (46). இவர் மேல்சிறுவள்ளூரில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்களுடன் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆரோக்கியதாஸ் நீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி ஆரோக்கியதாசை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின் ஆரோக்கியதாசை இறந்த நிலையில் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்