என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காணப்படும் ஊட்டி-பார்சன்ஸ்வேலி சாலை
- சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
- ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்
ஊட்டி,
ஊட்டி-பார்சன்ஸ்வேலி இடையே போக்குவரத்து சாலை உள்ளது. இதனை பழங்குடியின மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோடு நீண்ட காலமாக பராமரிக்கப்படவில்லை.
எனவே அங்கு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால் கவக்காடுமந்து, அட்டக்கொரைமந்து, மலவதிமந்து, அகநாடுமந்து, குந்தக்கோடுமந்து, ஆனக்கல்மந்து, பில்லிமந்து, பென்னப்பால்மந்து, நத்தனேரிமந்து, கல்லக்கொரைமந்து, கொள்ளிக்கோடுமந்து, மேக்கோடுமந்து, துக்கார்மந்து, கல்மந்து, பார்சன்ஸ்வேலி, கவர்னர் சோலை, அகதநாடு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதே போல அந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
எனவே ஊட்டி -பார்சன்ஸ்வேலி இடையே பழங்குடியின மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்






