என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாயை தாக்கிய தந்தையை தடுத்தபோது தவறி விழுந்து பலி- மகன் கைது
    X

    தாயை தாக்கிய தந்தையை தடுத்தபோது தவறி விழுந்து பலி- மகன் கைது

    • தாயை தாக்கிய தந்தையை தடுத்தபோது தவறி விழுந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம், குளதெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது70) விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி கஸ்தூரி (வயது65), மகன் ராஜேஷ் (வயது26) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    ராஜேஷ் டிராக்டர் டிரைவராகவும், விவசாயக் கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சீனிவாசன் குடிபோதையில் தனது மனைவி கஸ்தூரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினாராம். அப்பொழுது வீட்டிற்கு வந்த ராஜேஷ் இதனைக் கண்டு தனது தாயிடம் ஏன்? சண்டை போடுகிறீர்கள் என்று கூறி தனது தந்தை சீனிவாசனை தடுத்து தள்ளினாராம். அப்பொழுது நிலை தடுமாறி சீனிவாசன் கீழே விழுந்தாராம். இதில் தலையின் பின்பக்கம் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மஞ்சங்காரணியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று சீனிவாசன் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து கொண்டு வந்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். தாயை தாக்கிய தந்தையை தடுத்தபோது தவறி விழுந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×