என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்த முதியவர் சாவு
    X

    மயங்கி விழுந்த முதியவர் சாவு

    • ஓவியம்பாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    • அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓவியம்பாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகம் பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×