search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- சுரண்டை பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ. லியோனி பேச்சு
    X

    கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசிய காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உயர் கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- சுரண்டை பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ. லியோனி பேச்சு

    • பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இயற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கியவர் கலைஞர்.
    • உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கல்பனா அண்ணப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் செரீப், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, மாநில விவசாய அணி அப்துல் காதர், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனுர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நகர செயலாளர் ஜெயபாலன் வரவேற்று பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்ம நாதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் திட்ட கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி பேசும்போது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இயற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கியவர் கலைஞர். அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்காக கட்டணமில்லா பஸ் சேவை, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமை தொகை வழங்கி உள்ளார். தமிழக முதல்-அமைச்சரின் புதுமைப்பெண்கள் திட்டத்தால் உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், சீனித்துரை, அழகு சுந்தரம், ஜெயக்குமார், திவான் ஒலி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது, செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், சாக்ரடீஸ், ஏ.பி. அருள், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பேரூர் செயலாளர்கள் முத்து, சுடலை, பண்டாரம், சத்யராஜ், ஒன்றிய பிரதிநிதி கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் ஆறுமுகசாமி, பூல் பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ், சங்கரநயினார், சக்தி சாமுவேல்மனோகர், ஆலடிப்பட்டி ராமசாமி, வெள்ளத்துரை பாண்டியன், கவுன்சிலர் பரமசிவன், ஜேம்ஸ், சசிகுமார், வைகை கணேசன், ஜேம்ஸ், இளைஞர் அணி கோமதிநாயகம், ரத்தினசாமி, அருணா, தங்கலட்சுமி மாரியப்பன், லிசி ஹக்கீம், ஞானசீலன், ராமர், பவுன்ராஜ், மகேந்திரன், சங்கரபாண்டியன், மரியராஜ், கருப்பண்ணன், ராஜன், செல்வகுமார், சார்லஸ் முத்துப்பாண்டியன், பிரம்மா, தினகரன், மூர்த்தி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×