search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலித்தொழிலாளி மர்மச்சாவு
    X

    கூலித்தொழிலாளி மர்மச்சாவு

    • முனியப்பன் வீட்டின் வாசலில் நெற்றியில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கள்ளாங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). கூலித்தொழிலாளி.

    சம்பவத்தன்று முனியப்பனின் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்டார். இவர்களது 2 மகன்களும் வேலைக்காக வெளியூர் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் முனியப்பன் வீட்டின் வாசலில் நெற்றியில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மனைவி மற்றும் மகன்களும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை யாராவது அடித்து விட்டு வீட்டின் வாசலில் போட்டு சென்று விட்டனரா? அல்லது அவர் அதிகளவில் மது குடித்து விட்டு வீட்டு வாசலில் மயங்கி கிடந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×