என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
குஜிலியம்பாறையில் தாசில்தாரை மிரட்டியவர் கைது
- போலி ஐ.டி.கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனியாக ஒரு அமைப்பையும் அவர் நடத்தியது தெரியவந்தது.
- வேறுயாரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குஜிலியம்பாறை:
கரூர் மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன்(45). இவர் குஜிலியம்பாறை கோட்ட வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை சந்தித்து ரூ.1லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்ற வாசுதேவன் தாசில்தார் ரமேசையும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் வாசுதேவனை கைது செய்தனர். அவரிடமிருந்து போலி ஐ.டி.கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனியாக ஒரு அமைப்பையும் அவர் நடத்தியது தெரியவந்தது. வேறுயாரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






