என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியின் மனைவி, குழந்தையை தாக்கிவர் கைது
    X

    தொழிலாளியின் மனைவி, குழந்தையை தாக்கிவர் கைது

    • விநாயகர் சதுர்த்தி அன்று பிரச்சினை ஏற்பட்டது.
    • அவரது மனைவி, குழந்தையை கட்டையால் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள புன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் கங்கப்பா (வயது45). அதே பகுதியில் உள்ள ஸ்ரீராம் (வயது 52). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 வருடத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி அன்று பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் முன்விரோதம் காரணமாக கடந்த 6-ந் தேதி ஸ்ரீராம் தரப்பில் அஞ்சப்பா (43), ரமேஷ் (40), பாலகிருஷ்ணன் (29), சீனிவாசன் மற்றும் 5 பேரும், கங்கப்பா வீட்டிற்கு சென்று அவரது மனைவி, குழந்தையை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர்.

    Next Story
    ×