என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஞ்சிகோட்டை அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரம் கவிழ்ந்தது
- புதுச்சேரியில் இருந்து நேற்று பெங்களூர் நோக்கி திராட்சை பழங்கள் ஏற்றிவர லாரி ஒன்று சென்றது.
- லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது.
விழுப்புரம்:
புதுச்சேரியில் இருந்து நேற்று பெங்களூர் நோக்கி திராட்சை பழங்கள் ஏற்றிவர லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரங்கநாதன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் செஞ்சிக்கோட்டை அருகே அந்த லாரி வந்தது. அப்போது மழை பெய்ததால் அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அரங்கநாதன் லேசான காயமடைந்தார். அவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






