என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி மாயம்
- தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அரவிந்தராஜை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தியை அடுத்த தொன்னைமாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் அரவிந்தராஜ் (வயது22). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 29-ந் தேதி தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முத்துராஜ் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அரவிந்தராஜை தேடிவருகின்றனர்.
Next Story






