என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே விவசாயம் பார்க்க சொன்னதால் பட்டதாரி வாலிபர் மாயம்
- செல்வக்குமார் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார்.
- கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூற தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகன் செல்வக்குமார் (வயது 23), விவசாயத்தில் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான கடந்த 18-ந் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது கோதண்ட பாணி, நீ வேலைக்கு செல்லவேண்டாம், கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறுநாள் காலை செல்வ க்குமாரை காணவி ல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்ய ப்பட்டி ருந்தது. காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அங்கும் அவர் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து கோத ண்டபாணி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போல செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்