search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா கைப்பாவையாக கவர்னர் செயல்படுகிறார்அமைச்சர் பொன்முடி கடும்தாக்கு
    X

    கூட்டத்தில் அமைச்சர் ெபான்முடி பேசிய போது எடுத்த படம். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மேயர் சுந்தரி ராஜா உள்ளனர்.

    பா.ஜனதா கைப்பாவையாக கவர்னர் செயல்படுகிறார்அமைச்சர் பொன்முடி கடும்தாக்கு

    • கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பிரதிநிதிகள் ராமு, செந்தில்முருகன், பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப் பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். திராவிட மாடல் என்பது காலாவதியாகி விட்டது என தமிழக கவர்னர் ரவி கூறி வருகிறார். ஆனால், சனா தானம் தான் காலாவதியாகி விட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதிநிலை பற்றாக்குறையாக இருந்தது.

    Next Story
    ×