search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே  உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயி உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி
    X

    சிவகிரி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயி உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி

    • சிகிச்சையின் போது சண்முகத்துரை மூளைச்சாவு அடைந்து விட்டார்.
    • சண்முகத்துரையின் உடலுக்கு சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் தென்காசி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகத்துரை (வயது 52). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சையின் போது மூளைச்சாவு அடைந்து விட்டார். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்துள்ளனர். மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரையின் உடலுக்கு நேற்று மாலை, அவரது சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×